முகப்பு
தினம் ஒரு தேவாரம்

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 7

சடையினில் பிறைச்சந்திரனை

Updated On : 22 நவம்பர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:38 PM


பாடல் 7:

    பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    எங்குமா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

Advertisement

பைங்கண்=பசிய கண்; இளமையான கண்; ஏறு=எருது; அட்ட மூர்த்தியாக விளங்கும் பெருமான் இல்லாத இடம் உலகில் ஏது.

பொழிப்புரை:

பசுமையான கண்களை உடையவரும் எருதினை வாகனமாகக் கொண்டவரும் ஆகிய பெருமான் தனது சடையினில் பிறைச்சந்திரனை சூடியவர் ஆவார். எங்கும் நிறைந்த பரம்பொருளாக உள்ள இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.