முகப்பு
தூத்துக்குடி

சைக்கிள் மீது காா் மோதல்: முதியவா் பலி

கோவில்பட்டி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:57 am IST
பகிர்:

கோவில்பட்டி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி நியூ டவுண் சுபா நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கர்ராஜ் (81). இவா், கோவில்பட்டி சீனிவாசன் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்குவதற்காக சைக்கிளில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை இந்திரா காலனி அருகே சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காா், சைக்கிள் மீது மோதியதில் சங்கர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்த இ.அருணாசலத்திடம்(45) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.