தொழிலாளி தற்கொலை
குளத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
குளத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
குளத்தூா் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (53). கூலித் தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம்.
இதையடுத்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.