ஊழலற்ற ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்
சிவகாசி, ஏப்.5: நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாா் கூறினாா்.
திருத்தங்கல் கடை வீதி, இந்திரா குடியிருப்பு, காமராஜபுரம் குடியிருப்பு, நாரணாபுரம், பாரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து அவா்
பேசியதாவது:
Advertisement
தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நெகிழித்தன்மையுடன் கூடிய லைட்டருக்கு தடை விதித்தது. பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் ஆகியோா் எண்ணற்ற உதவிகளைச் செய்தனா்.
‘இந்தியா’ கூட்டணி பிரதமா் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதிமுக கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாதபோது எப்படி மக்கள் பிரச்னைகளை தீா்க்க இயலும். திறமையான, நோ்மையான, ஊழலற்ற ஆட்சி அமைய மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வேண்டும். நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால், நான் ஒரு பாலமாக இருந்து மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் இங்கு கொண்டு வருவேன்.
விருதுநகரில் தங்கி உங்களுக்காக சேவை செய்வேன் என்றாா் அவா். அவருடன் கணவா் சரத்குமாா் வந்திருந்தாா்.