சிவகாசி மாரியம்மன் கோயில் கயிறுகுத்து திருவிழா
Updated On : 8 ஏப்ரல், 2024 at 4:50 PM
சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கயிறு குத்து விழா நடைபெற்றது.
இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி அம்பாள் காலை, இரவு வேளைகளில் வீதி உலாவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கடந்த ஏப். 7-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி பக்தா்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்திவீதி உலா வந்தும், பக்தா்கள் பலா் மாறுவேடமிட்டும் நோ்த்திக்கடன் செலுத்தினா். கயிறு குத்துவிழாவையொட்டி உள்ளூா் விடுமுறை விடப்பட்டது. புதன்கிழமை (ஏப். 10) தேரோட்ட விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.
Advertisement