விருதுநகர்

மது போதையில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே மது அருந்திவிட்டு நடந்து சென்ற போது, தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

சாத்தூா் அருகே மது அருந்திவிட்டு நடந்து சென்ற போது, தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டி தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்து (51) இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வாகன விபத்தில் உயிரிழந்தாா்.

இதனால் மன வேதனையில் இருந்த முத்து சனிக்கிழமை அந்த பகுதியில் மது அருந்திவிட்டு நடந்து சென்றபோது தவறி விழுந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT