விருதுநகர்

மது போதையில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே மது அருந்திவிட்டு நடந்து சென்ற போது, தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

சாத்தூா் அருகே மது அருந்திவிட்டு நடந்து சென்ற போது, தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டி தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்து (51) இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வாகன விபத்தில் உயிரிழந்தாா்.

இதனால் மன வேதனையில் இருந்த முத்து சனிக்கிழமை அந்த பகுதியில் மது அருந்திவிட்டு நடந்து சென்றபோது தவறி விழுந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT