ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடிபுரத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஆண்டாள் ரெங்கமன்னாா் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
5-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை காலை பெரியாழ்வாா் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னாா், சுந்தரராஜப் பெருமாள், சீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோா் ஆண்டாள் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளும் சேவை நடைபெற்றது.
இன்று சயன சேவை: 7-ஆம் நாள் விழாவான திங்கள்கிழமை (ஆக. 5) இரவு ஆண்டாள் கோயிலின் துணைக் கோயிலான கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னாா் சயனித்திருக்கும் சேவை நடைபெறுகிறது.