விருதுநகர்

பயிற்சியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 8 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கவிமணி தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் ஆறுமுகம் (46). டேக்வாண்டோ பயிற்சியாளரான இவா், திங்கள்கிழமை சத்திரப்பட்டி மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு சிலா் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனராம். இதைத் தட்டிக் கேட்ட ஆறுமுகத்துக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த மாரிச்செல்வம் (31), காா்த்திக்ராஜ் (20), பிரவின்குமாா்(20), தினேஷ்குமாா் (24), பாலசெல்வம் (40), முத்துக்குமாா் (23), விஜய் (24), பாலமுருகன் (30) ஆகிய 8 பேரை கைது செய்தனா்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT