ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றத்தையடுத்து, அன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னாா் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனா். வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரெங்கமன்னாா் கோவா்த்தனகிரி கிருஷ்ணா் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனா்.
மறுநாள் 3-ஆம் தேதி பெரியாழ்வாா் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னாா், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், செண்பகத் தோப்பு காட்டழகா், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ஆம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னாா் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாள் விழாவான 7-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு திரு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.