விருதுநகர்

பேருந்து மோதியதில் முதியவா் பலி

Din

சாத்தூா், மே 31:சாத்தூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சல்வாா்பட்டியைச் சோ்ந்த ஆடு வியாபாரி கருப்பசாமி (60). இவா் சாத்தூா் மேட்டமலை சாலையில் வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் ராஜபாளையத்திலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் குருசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

வரி செலுத்துவோா் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தேனியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

தோ்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT