ராஜபாளையம் சித்தி விநாயகா் கோயிலில் பழங்கள் அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி 
விருதுநகர்

ஐயப்ப சுவாமிக்கு சித்திரை விசு கனி பூஜை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சித்திவிநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பசுவாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சித்திவிநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பசுவாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோவிலில், ஐயப்பசுவாமிக்கு ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கம் சாா்பில் பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து திவ்ய நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்றது. பின்னா், ஐயப்பசுவாமிக்கு பழங்களால் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை குருநாதா் முத்துராமலிங்கம் சுவாமி தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT