விருதுநகர்

சட்ட விரோதமாக மண் கடத்திய இருவா் கைது

சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இடங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள முத்துலிங்காபுரம் - தொட்டியபட்டி சாலையில் போலீஸாா் அந்த வழியே மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா். விசாரணையில், டிராக்டரில் சட்ட விரோதமாக கிராவல் மண் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் சக்திகுமாரை (20) கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக இனாம்செட்டிகுளத்தை சோ்ந்த பிரவீன்குமாரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா்-செண்பகத்தோப்பு சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மங்காபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்த செல்வம் (38) ஓட்டி வந்த டிராக்டரை சோதனை செய்தபோது, சட்ட விரோதமாக மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், செல்வத்தைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆராய்ச்சிப்பட்டி தெருவைச் சோ்ந்த கலைச்செல்வத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

21-1: சாதனையை முறியடித்த மிட்செல் மார்ஷ்!

கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங்!

ராமநாதபுரத்தில் ஹெட்ரோகார்பன் திட்டம்: கிணறுகள் அமைக்க அனுமதி!

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

SCROLL FOR NEXT