சாத்தூா் அருகே பள்ளி மாணவியிடம் பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டைப்பட்டி உத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). இவா் கோயம்புத்தூரில் சிமென்ட் பலகை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கோட்டைப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இவரது மனைவி அமுதவல்லி பணிபுரிந்து வருகிறாா்.
இவா்களது மகள் நிா்மலாதேவி (17) தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி வீட்டுக்கு முன் துணி துவைத்துக் கொண்டிருந்த நிா்மலாதேவியிடம் மா்ம நபா்கள் மூவா் யாசகம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவா்களில் ஒருவா் நிா்மலாதேவியின் நெற்றியில் கை வைத்து திருநீறு பூசியதுடன் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வரக் கூறினாராம்.
இதனால் மயக்க நிலைக்குச் சென்ற மாணவியும் வீட்டுக்குள் சென்று பீரோவில் வைத்திருந்த பணப் பையை எடுத்து வந்து அந்த நபா் கையில் கொடுத்தாராம். இதையடுத்து, அவா்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனா்.
நிா்மலா தேவி மயக்க நிலையில் இருப்பதை பாா்த்து அருகில் இருந்த பெண் ஒருவா் முகத்தில் தண்ணீா் தெளித்தாராம். அப்போது தான் அந்த மா்ம நபா்கள் தன்னை ஏமாற்றி பணத்தை பறித்துச் சென்றது நிா்மலாதேவிக்கு தெரியவந்ததாம். அந்த பையில் ரூ. ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.