விருதுநகர்

ராஜபாளையம் கடையில் 7 கிலோ குட்கா பறிமுதல்

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் கடையில் 7 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

ராஜபாளையம் -மதுரை சாலையில் பஞ்சு சந்தைப் பகுதி கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, அங்கு குட்கா, புகையிலை பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடை உரிமையாளரான அழகாபுரி கீழத் தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் முனியாண்டியை (49) போலீஸாா் கைது செய்து, 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT