விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா், சத்திரப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ரயில்வே மேம்பாலம் கிழக்குப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து சோதனையிட்டனா். இதில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், கம்மாளப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த முத்துக்கழுவன் மகன் ஜெயம் (64) என்பதும், தேனியிலிருந்து இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனைக்காக கொண்டுவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.