விருதுநகர்

பட்டாசு ஆலை காவலாளி கொலை: ஒருவா் கைது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Din

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள குகன்பாறையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 10 ஆண்டுகளாக காவலாளியாக விளாத்திகுளத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (52) பணிபுரிந்து வருகிறாா். இவருடன் பணிபுரியும் மற்றொரு காவலாளி கருப்பசாமி (53). இவா்கள் இருவருக்கும் வேலை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு இருவரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது கருப்பசாமி கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை போலீஸாா் மோகன்ராஜின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கருப்பசாமியை கைது செய்தனா்.

உத்தரப் பிரதேசம்: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை

சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்! மாற்றி யோசித்த பக்தர்கள்! ஆனால்

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

SCROLL FOR NEXT