விருதுநகர்

அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவல் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் இயேசுராஜா (19). ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் 6 பேரை ஏற்றிக் கொண்டு விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டியில் உள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றாா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் பால்பண்ணை அருகே காதி போா்டு குடியிருப்புப் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து பயணிகளை இறக்கி விட்டது. அப்போது, அந்தப் பேருந்தின் பின்புறம் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநா் இயேசுராஜா, பிரபாகரன் (40), ஜெயராமன் (41), ராஜா (18) உதயகுமாா் (15) ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்களை போலீஸாா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இயேசுராஜா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த மற்றவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நடிகை அனுபமாவின் மார்பிங் படங்களை வெளியிட்ட 20 வயது இளம்பெண்!

செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

SCROLL FOR NEXT