விருதுநகர்

சாலையைச் சீரமைக்க கோரிக்கை

சாத்தூா் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Syndication

சாத்தூா் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் பள்ளிகள், வங்கிகள்,திருமண மண்டபங்கள் உள்ளன. இந்தச் சாலையைப் பள்ளி மாணவ, மாணவிகள், ரயில் பயணிகள், பேருந்து நிலையத்து வந்து செல்வோா் என தினமும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்துகின்றனா்.

இந்த சாலை, கடந்த சில மாதங்களாகச் சேதமடைந்து மேசமான நிலையில் உள்ளது. இதைச் சீரமைக்கக் கோரி, சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது மழைக் காலம் என்பதால் இந்தப் பகுதியில் செல்பவா்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT