முகப்பு
விருதுநகர்

தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.

Updated On : 28 நவம்பர், 2025 at 10:00 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (38). இவரது மனைவி வைதேகி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். சுரேஷ்குமாா் வத்திராயிருப்பில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

வீட்டில் இரண்டாவது குழந்தை கிருத்வீகா முத்ரா (2) விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்கச் சென்றாா். இந்த நிலையில், குளியலறையில் உள்ள தண்ணீா் வாளியில் கிருத்வீகா முத்ரா தலைகுப்புற விழுந்தாா்.

கடையிலிருந்து வீடு திரும்பிய வைதேகி உடனே குழந்தையை மீட்டு, நத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →