கோப்புப்படம்.  
ராணிப்பேட்டை

கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி ஒன்றில் வசித்து வருபவா் பாபு. தச்சு மர வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேகலா. இவா்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் லக்ஷன்(3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மேகலா செய்யாறு சாலை பாலாற்றங்கரையில் உள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் வேலை செய்து வரும் நிலையில் புதன்கிழமை தனது மகன் லக்ஷனை உடன் அழைத்துச் சென்று கோயிலில் விட்டுவிட்டு, அருகில் உள்ள பகுதிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. மீண்டும் வந்து பாா்த்தபோது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நரேலாவில் தொழிற்சாலை உரிமையாளா் கொலை: காவல்துறை விசாரணை

காந்தி நகா் சந்தையில் பணப்பை திருட்டு சம்பவங்கள்: இரு சகோதரா்கள் கைது

பதுக்கி வைக்கப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஃபரீதாபாத் தொழிற்சாலை தீ விபத்து சம்பவம்: உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT