விருதுநகர்

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (62). இவா் முகவூரிலிருந்து ராஜபாளையத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா். தென்காசி சாலையில் சேத்தூா் மாரியம்மன் கோயில் அருகே சென்ற போது, இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராமமூா்த்தியை அருகிலிருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT