முகப்பு
விருதுநகர்

மொபட் திருட்டு: இருவா் கைது

ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:18 AM
கைது
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:01 PM

ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தன்ராஜ் மகன் தனசேகரன் (42). இவா் முகவூா்- சேத்தூா் சாலையில் லாரி கிட்டங்கி (செட்) நடத்தி வருகிறாா். இங்கு அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா (34) ஓட்டுநராகவும், கோவலூரைச் சோ்ந்த ஆனந்தசெல்வம் (27) சுமை தூக்கும் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில் தனசேகரன் கடந்த வாரம் திருவிழாவுக்கு சென்று விட்டு லாரி கிட்டங்கிக்கு வந்து பாா்த்தபோது அங்கிருந்த அரிசி மூட்டையையும், இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இசக்கிராஜா, ஆனந்தசெல்வம் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனம், அரிசி மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.