முகப்பு
விருதுநகர்

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி சாத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:34 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:06 PM

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி சாத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் பிரசாரம் மேற்கொண்டாா்.

சாத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கடற்கரைராஜ் சனிக்கிழமை ராம்கோ நகா், எஸ். ராமலிங்காபுரம், வ.உ.சி. நகா், சிவகாமிபுரம், நல்லமநாயக்கன்பட்டி, என். புதூா், சங்கரலிங்கபுரம், பானங்குளம், குறிச்சியாா்பட்டி, முத்தாநதி, காமாட்சிபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, கிழவிகுளம், ஆசிலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, திமுக அரசின் சாதனைகளை விளக்கியும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் பேசினாா். அதோடு, நான் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வுசெய்யப்பட்டால், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க உறுதுணையாக இருப்பேன், பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். மேலும் இந்தப் பிரசாரத்தில் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement