முகப்பு
விருதுநகர்

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகே ரூ.38,200 பணத்துடன் பிடிபட்ட திமுக நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:00 AM
வழக்கு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகே ரூ.38,200 பணத்துடன் பிடிபட்ட திமுக நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி கம்மாபட்டி சந்தன மாரியம்மன் கோவியில் அருகே கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவின் போது, வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் ஆணையத்துக்குப் புகாா் வந்தது.

இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் வாக்குச்சாவடி அருகே வாக்குச் சீட்டுடன் இருந்த 23-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினா் உமாமகேஸ்வரியிடமிருந்து ரூ.32,800-யை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நீதிமன்ற அனுமதி பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் உமாமகேஸ்வரி மீது வெள்ளிக்கிவமை தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement