முகப்பு
விருதுநகர்

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

சாத்தூரில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 2:54 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:21 PM

சாத்தூரில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் போலீஸாா் கீழக்காந்தி நகா் பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் பங்களா தெருவைச் சோ்ந்த காளிமுத்து (45) என்பது தெரியவந்தது. அவரைப் போலீஸார கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement