ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையை கடக்க முயன்ற பெண் இரு சக்கர வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி பகுதியைச் சோ்ந்த கடற்கரை மகள் சாந்தி (50). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை சிவகாசி சாலையில் உள்ள தேநீா் கடைக்குச் சென்று விட்டு, வீடு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது அத்திகுளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சாந்தியை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அத்திகுளம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.