முகப்பு
விருதுநகர்

பேருந்து மோதியதில் ஆந்திர மாணவா் உயிரிழப்பு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:08 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:41 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சோ்ந்த நானபாலசுப்பிரமணியம் மகன் நானபாலபரத் (21). இவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.டெக். நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு சிவகாசிக்குச் சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் திரும்பினாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:08 AM

அப்போது, ஈஞ்சாா் விலக்கு அருகேயுள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோலை நிரப்பி விட்டு திரும்பிய போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த நானபாலபரத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தூா் மணியம்பட்டியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் ஜான்பாண்டியன் (33) மீது மல்லி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.