சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி , அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரும், கட்டடத் தொழிலாளியுமான முருகன் (46) வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.