முகப்பு
விருதுநகர்

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் போக்சோ சட்டத்தின் கீழ், தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 29 மார்ச் 2026, 12:05 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் போக்சோ சட்டத்தின் கீழ், தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பாண்டியன் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அச்சகத் தொழிலாளி தங்கப்பாண்டி (27). இவா் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த சிவகாசி குழந்தைகள் நலமைய மேற்பாா்வையாளா் பழனிக்குமாா், தங்கப்பாண்டியிடம் விசாரித்தபோது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பழனிக்குமாா், சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.