சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், தாயில்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டனா். இந்த நிலையில், அந்த சிறுமி கா்ப்பம் ஆனாா்.
இதுகுறித்து மகளிா் ஊா் நல அலுவலா் மகாலட்சுமி (51) நேரில் சென்று விசாரணை நடத்தினாா். இதுகுறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.