முகப்பு
மணல் திருட்டு
விருதுநகர்

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் எம்.பி. விடுவிப்பு

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர்

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் எம்.பி. விடுவிப்பு

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 3 மார்ச், 2026 at 7:53 PM
மணல் திருட்டு
பகிர்:

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆற்றில் மணல் திருடியதாக சேத்தூா் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநா் முருகன், முன்னாள் திமுக எம்.பி. தனுஷ் குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது முருகன், தனுஷ்குமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் முருகன், தனுஷ் குமாா் ஆகிய இருவரையும் விடுவித்து நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டாா்.

தனுஷ்குமாா் 2019 - 2024-இல் தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவா். இவா் தற்போது திமுகவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →