சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
ராஜபாளையம் அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினா், கீழராஜகுலராமன் போலீஸாா் அந்தப் பகுதியில் சென்று சோதனை செய்தபோது, அங்கு பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காா்த்திக் (31), அழகுராஜன் மகன் இளங்கோ (28) சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.