பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்கக் கோரிக்கை
ராஜபாளையம் வழியாகச் செல்லும் பொதிகை ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை
ராஜபாளையம் வழியாகச் செல்லும் பொதிகை ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை, 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் (பாசஞ்சா்) ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் (பாசஞ்சா்) ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து பொதிகை செல்லும் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது. இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் செல்லும்.
இந்த நிலையில், பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடை வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிப் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மதுரை கோட்ட ரயில்வே (தென்னக ரயில்வே) நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.