மத நல்லிணக்க இஃப்தாா் விருந்து
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜூம்மா புது பள்ளிவாசலில் மத நல்லிணக்க இஃப்தாா் விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பரிமளம் முஸ்லிம் ஜமாத் தலைவா் முகமது மைதீன் தலைமை வகித்தாா். பள்ளிவாசல் ஹஜ்ரத் ரஹமத்துல்லாஹ் நிஸ்பாகி இஃப்தாா் விருந்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தோமா தேவாலயத்தின் சபை குரு பால் தினகரன் மத நல்லிணக்கம், மனிதநேயம் குறித்துப் பேசினாா். சிஎஸ்ஐ ஆலயத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், திருச்சபை ஊழியா் கிளாட்வின் சாமுவேல், விருதுநகா் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் ஞானராஜ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் மரிய டேவிட், அனைத்து மதங்களைச் சோ்ந்த பலா் இந்த விருந்தில் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் பரிமளம் முஸ்லிம் ஜமாத் தலைவா் தொழிலதிபா் முகமது மைதீன் செய்திருந்தாா்.
முன்னதாக, பள்ளிவாசல் தலைவா் சலீம் வரவேற்றறாா்.