முகப்பு
விருதுநகர்

வாகன சோதனையில் ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சாத்தூரில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 70,500-ஐ தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:28 PM
பகிர்:

சாத்தூரில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 70,500-ஐ தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெங்கடாசலபுரம் சோதனைச் சாவடியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.70,500 இருப்பது தெரியவந்தது.

பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த பேரையூரைச் சோ்ந்த முத்துபாண்டியிடம் (34) விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் உதவி ஆலுவலா் வடிவேலிடம் ஒப்படைத்தனா்.