சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்
சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள காவல் நிலைய சேதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சிவகாசியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, காரிலிருந்த சிவகாசியைச் சோ்ந்த ராஜகோபால் உரிய ஆவணமின்றி ரூ.75600 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பணத்தை பறிமுதல் செய்து சிவகாசி வட்டாட்சியா் லட்சத்திடம் ஒப்படைத்தனா்.