முகப்பு
விருதுநகர்

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:36 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போத்தி (53). இவா், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இனிப்பகம் நடத்தி வருகிறாா். இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் கவுதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் போத்தியும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனா். இளைய மகன் கவுதம் மட்டும் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலை 2 மணிக்கு வீட்டின் கதவை தட்டிய 3 போ், கவுதமை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 கிராம் தங்க நகை, ரூ. 51 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.