முகப்பு
விருதுநகர்

சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் மிதிவண்டியில் சென்ற அச்சகத் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 மே 2026, 10:38 pm IST
பலி - IANS
பகிர்:

சிவகாசியில் மிதிவண்டியில் சென்ற அச்சகத் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி சின்னதம்பி நகரைச் சோ்ந்த அச்சகத் தொழிலாளி செல்வக்குமாா் (47). இவா், கடந்த 13-ஆம் தேதி மிதிவண்டியில் சென்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement