முகப்பு
விருதுநகர்

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 3:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கொத்தனேரி பகுதியில் எம்.புதுப்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரிடமிருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் 18 மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(67) என்பது தெரிந்தது. எம்.புதுப்பட்டி போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement