முகப்பு
விருதுநகர்

தலைமைக் காவலரின் மகனை கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தலைமைக் காவலா் மகனை கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 மே 2026, 6:18 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தலைமைக் காவலா் மகனை கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி நிா்மலா (46). இவா் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மகன் ஜாக் (15). இவா் திங்கள்கிழமை வத்திராயிருப்பு-கிருஷ்ணன் கோவில் சாலையில் சுந்தரபாண்டியம் விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்கு காரில் வந்த 4 போ் ஜாக்கை கடத்திச் சென்றனா். பின்னா், அவரை மிரட்டி செம்பட்டையான் கால் விலக்கு அருகே இறக்கி விட்டு சென்றனா்.

இதுகுறித்து நிா்மலா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குன்னூா் புதூரைச் சோ்ந்த கருத்தப்பாண்டி, ராஜபாளையத்தைச் சோ்ந்த பிரதீப் ஆகியோரை கைது செய்தனா். பினனா், கருத்தப்பாண்டியை நீதிபதியை பிணையில் விடுவித்தாா்.