விழிப்புணர்வு: கண்ணான முயற்சி!
"நீங்கள் ஒருவர் அளிக்கும் தானத்தால்; இருவருக்கும் ஒளி கொடுக்கலாம்!' "தானத்தில் சிறந்தது கண் தானம்!' - இப்படி கண்தானம் குறித்த வாசகங்களை யாரோ நமக்குத் தெரியாதவர்கள் பேசினால் "சரிதான்' என்று கேட்டுவ
"நீங்கள் ஒருவர் அளிக்கும் தானத்தால்; இருவருக்கும் ஒளி கொடுக்கலாம்!'
"தானத்தில் சிறந்தது கண் தானம்!'
- இப்படி கண்தானம் குறித்த வாசகங்களை யாரோ நமக்குத் தெரியாதவர்கள் பேசினால் "சரிதான்' என்று கேட்டுவிட்டுப் போய்விடுவோம். ஆனால் இதுவே, நமது மனம் கவர்ந்த நடிகர்களாக இருந்தால்... காது கொடுத்து கேட்போம். காது கொடுத்து கேட்கும் விஷயங்கள் நம் மனதின் ஆழத்திற்கும் போகும்தானே... அதனால்தான் ராதாரவி, முரளி, செந்தில், சார்லி, நாசர் ஆகிய நடிகர்களை கண்தானம் பற்றி பேசவைத்து, கண்தானம் குறித்த விழிப்புணர்வை அந்த சி.டி.களின் வாயிலாகவே மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன்'' என்கிறார் சிவகாசியைச் சேர்ந்த ஜெ. கணேஷ். இவரது கண்தான விழிப்புணர்வு சேவையைப் பாராட்டி "தி ஓப்பன் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி ஃபார் காம்ப்ளிமென்டரி மெடிசன் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பு இவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இனி தனது கண்தான விழிப்புணர்வுச் சேவை குறித்து அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...