முகப்பு
தினமணி கதிர்

தீபாவளி டிப்ஸ்

  *   பாதுஷாக்கள் தயாரானவுடன் முதலில் அதன் மேல் சர்க்கரையை லேசாகத் தூவ வேண்டும். பிறகு அதன் மேல் கலர் தேங்காய் துருவலை தூவ வேண்டும்.   *   இனிப்புகள் செய்யும்போது சற்று அதிகமாகி விட்டாலும் முறிந்து உத

தினமணி கதிர்

தீபாவளி டிப்ஸ்

  *   பாதுஷாக்கள் தயாரானவுடன் முதலில் அதன் மேல் சர்க்கரையை லேசாகத் தூவ வேண்டும். பிறகு அதன் மேல் கலர் தேங்காய் துருவலை தூவ வேண்டும்.   *   இனிப்புகள் செய்யும்போது சற்று அதிகமாகி விட்டாலும் முறிந்து உத

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:53 PM
பகிர்:

  *   பாதுஷாக்கள் தயாரானவுடன் முதலில் அதன் மேல் சர்க்கரையை லேசாகத் தூவ வேண்டும். பிறகு அதன் மேல் கலர் தேங்காய் துருவலை தூவ வேண்டும்.

  *   இனிப்புகள் செய்யும்போது சற்று அதிகமாகி விட்டாலும் முறிந்து உதிர்ந்துவிடும். கையில் "பிசுக்' என்று ஒட்டும் பதம் வந்தவுடனேயே எடுத்துக் கொட்டிவிட்டால் ஆற ஆற சரியாக இருக்கும்.

  *  வடை செய்யத் தயார் செய்யும்போது மாவு நீர்த்துவிட்டால் கொஞ்சம் ரொட்டித்தூள் அல்லது பம்பாய் ரவை அல்லது உலர்ந்த உளுத்தம் மாவும் தூவி பிசைந்தால் சரியாகிவிடும்.

  *  சுருள்போளி, சோமாஸ் இவற்றுக்கு மாவு செய்யும்போது டால்டா, சோடா உப்பு கலந்து ஐந்து மணி நேரம் ஊறிய பின் செய்தால் மிருதுவாக இருக்கும்.

  *  நெய்விட்டு ரவா லட்டு செய்த பின் வெள்ளை நிறம் கிடைக்க சர்க்கரையை நைசாக அரைத்து அதில் புரட்டி எடுக்க வேண்டும்.

  *   பொரிகடலையை மாவாக்கி சர்க்கரை சேர்த்து மா லட்டு செய்வதற்குப் பதிலாக பயத்தம் பருப்பை மாவாக்கி வெல்லப்பாகு சேர்த்து மாலட்டு பிடித்தால் சத்தான பண்டமாக இருக்கும்.

  *  கோதுமை அல்வா செய்யும்போது கடைசியில் இரண்டு சொட்டு பாதாம் எசன்ஸ் விட்டால் பாதாம் அல்வாவைப்போல கமகமவென மணக்கும்.

   *  லட்டு பிடிக்க பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப்பொடி, உப்புத்தூவி, கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் காரசார காரா பூந்தி ரெடி!

முழு கட்டுரையைப் படிக்க →