முகப்பு
தினமணி கதிர்

இன்னா செய்யாமை!

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களை காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 31 மே, 2015 at 2:44 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:09 AM

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களை காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் செருப்புத் தைத்தார். முதல் இணைச் செருப்பே சிறப்பாக அமைந்தது. அதனை யாருக்காவது அன்பளிப்பாக அளிக்க விரும்பினார். அவர் நினைவிற்கு வந்த முதல் மனிதர் ஸ்மட்ஸ்.

அவர் காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர். சிறையிலிருந்து விடுதலையானதும் ஸ்மட்ûஸ சந்தித்துத் தான் தைத்த காலணிகளை வழங்கினார். அதற்குப் பதிலாக ஸ்மட்ஸ், காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். அவற்றைப் பொன்னைப்போல் போற்றித் தம்முடனே வைத்துக் கொண்டார் காந்தியடிகள்.

1948-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகமே இரங்கல் செய்தி விடுத்தது. ஸ்மட்ஸ் தம்முடைய இரங்கல் செய்தியில், ""காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே அதனை எடுத்துச் சென்று என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்'' என்று குறிப்பிட்டார்.

Advertisement

("காந்தியம்' என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.