மிகப்பெரும் கெளரவம்!
இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது.
இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரி அவர் வீட்டுக்கே சென்று வாக்குச்சாவடிக்கு காரில் அழைத்துச் சென்று, அவர் வாக்கைப் பதிவு செய்ததும் மீண்டும் வீட்டுக்கு கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரணம் 100 வயதான ஷியாம் இந்தியாவில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் (1952) இருந்து இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.