தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

முருகேசனுக்கு கட்சி சார்பில்  உள்ளாட்சி தேர்தலில் தலைவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவனைத் தேடி ஓர் இளம் பெண்ணும் ஒரு  தாத்தாவும்  வந்தனர்.
 பெரியவர் சொன்னார்: "முருகேசா ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயமாயிருக்கு... என் பொண்ணை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ'' என்றார். 
"யோவ் பெரிசு இப்ப என் நிலைமையே வேற... உன் பொண்ணை எல்லாம் என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது'' என திட்டவட்டமாக மறுத்துவிட்டான் முருகேசன்.
தேர்தல் நடந்தது. முடிவும் வந்தது.  முருகேசன் வெறும் இரண்டு ஓட்டு விஷயத்தில் தோற்றுவிட்டான்.  
எஸ்.அருள்மொழி சசிகுமார், 
கம்பைநல்லூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT