முகப்பு
தினமணி கதிர்

பண்புகளின் உறைவிடம் கவிஞர் கா.மு.செரீப்

கவிஞர் கா.மு.செரீப் பல நல்ல பண்புகளின் உறைவிடமாவார்.  சினிமா உலகத் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத  உயர்பண்பு கவிஞர் கா.மு.செரீப் அவர்களிடம் மட்டுமே இருந்தது.

Updated On : 27 ஆகஸ்ட், 2018 at 12:40 PM
பகிர்:

கவிஞர் கா.மு.செரீப் பல நல்ல பண்புகளின் உறைவிடமாவார்.  சினிமா உலகத் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத  உயர்பண்பு கவிஞர் கா.மு.செரீப் அவர்களிடம் மட்டுமே இருந்தது.
ஒரு கவிஞன்  வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வது  என்பதை அவரிடம் நான் கற்றுக் கொண்டேன்.
"பாட்டும் நானே பாவமும் நானே' என்னும் பாடலை எழுதியவர்  கா.மு.செரீப். கண்ணதாசன் பெயரால் இப்பாடல் வெளிவந்த போதும் ""கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது'' என்று மனமுவந்து  பாராட்டும் பண்பை நான்  இவரிடம்தான் கண்டேன்.
 கவி.கா.மு.செரீப் படைப்பை விடவும்,  அவரது பாடல்களை விடவும், அவரையும் அவரது குணாதிசயங்களையும் நான் அதிகம் நேசிக்கிறேன்.
(ஜெயகாந்தன்  "ஓர்  இலக்கியவாதியின்  கலையுலக அனுபவங்கள்'  நூலில் எழுதியது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.