தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

"நாளைக்கு உனக்கு கிரிட்டிகல் ஆபரேஷன் பண்ணப் போறதை நினைச்சு வருத்தமா இருக்கியாப்பா?'' என்று நோயாளி குமாரைப் பார்த்து டாக்டர் கேட்டார். 
" இல்ல டாக்டர். ஆபரேஷனை நினைச்சு வருத்தமோ, பயமோ இல்லை'' என்ற குமார்... "ஆனால்?'' என்று இழுத்தான்.
"என்னப்பா?'' என்று கனிவுடன் கேட்டார் டாக்டர்.
"ஒரு தூக்குத்தண்டனை கைதிக்கு கொடுக்குற மரியாதையைக் கூட என் சொந்தக்காரங்க யாரும் கொடுக்கல.. பிரண்ட்ஸ் யாரும் கொடுக்கல'' என்றான் குமார் வருத்தத்துடன்.
"என்னப்பா சொல்றே? ஒண்ணும் புரியலையே?'' என்ற கேட்ட டாக்டரிடம் குமார் கோபமாகச் சொன்னான்:
"என்னை வந்து பார்த்த ஒருத்தர் கூட என் கடைசி ஆசை என்னன்னு கேட்கலையே டாக்டர்'' .
கோ.வினோத், கிருஷ்ணாபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT