* "நீங்க தூங்கும்போது கூட ஏன் தலையில விக் போட்டுக்கிறீங்க?''
"கனவுல திடீர்ன்னு அழகான பொண்ணு வந்தா?''
* அவள்: என்ன உன் கணவர் சாப்பிட்டு கை கழுவாம மொட்டை மாடிக்குப் போறாரு?
இவள்: எச்ச கையால அவரு காக்காய் ஓட்டப் போறாராம்.
* "பேங்குக்குப் போன அவரை ஏன் ரெண்டு பேர் கைத்தாங்கலா பிடிச்சுக்கிட்டுப் போறாங்க''
"அவருக்குப் பேங்க்ல பேலன்ஸ் இல்லையாம்''
* "நம் மன்னர் எதுக்கு அரண்மனை நிறையப் பூனை வளர்க்கிறாராம்?''
"போருக்குக் கிளம்பும்போது பூனை குறுக்கே வந்ததுன்னு சொல்லி நைஸô போருக்குப் போகாம இருக்கத்தான்''
வி.சாரதி டேச்சு, சென்னை-5.