குமாரசாமி, ஆட்சியையும் பதவியையும் தக்க வைத்துக் கொள்ள கோயில் கோயிலாகச் சென்று வருகிறார் என கிசுகிசுக்கப்படுகிறது. 100 நாளில் 50க்கும் அதிகமான கோயிலுக்குச் சென்றுள்ள முதல்வர் குமாரசாமி இதனை மறுக்கிறார்.
"நான் தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டவன். எப்போதும் கோயிலுக்குச் செல்பவன். குறைந்தது இரண்டு கோயில்களுக்காவது தினமும் செல்பவன். அதனால் கோயில் எனக்குப் புதிதல்ல'' என்று கூறும் குமாரசாமி 47 கோயில்கள், 1 தர்கா, 1 சர்ச் மற்றும் ஒரு பள்ளி வாசலுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.