"சிரிக்காதே' என்னும் தலைப்பில் 1939-ஆம் ஆண்டு படம் ஒன்று வெளியானது. இது ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையையும் தனித்தனியே ஒவ்வொரு இயக்குநர் இயக்கினார்.
வாலியோடு "மாம்பலம் கிளப் அவுஸில்' குடியிருந்தார் ஓர் இளைஞர். இருவருமே திரைப்பட வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்த நேரம் அது. ஆனால் மிக நம்பிக்கையோடு அந்த வாலிபர் சொன்னார்: ""நீ பார்த்துக் கொண்டே இரு வாலி. நிச்சயம் நம்ப ரெண்டு பேருக்கும் ஒரு நாள் வரும். படத் தயாரிப்பாளர்கள் நம்ம வீட்டு வாசல்ல நிக்கிற நாள் வரும்'' என்று.
அப்படிச் சொன்னவர்: நாகேஷ்.